ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
அரவான் படத்திற்கு பிறகு வசந்தபாலன் இயக்கியுள்ள படம் காவியத் தலைவன். இது நாடக கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டது. வருகிற நவம்பர் 14ந் தேதி ரிலீசாகிறது. படத்தை விளம்பரப்படுத்த பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார்கள். அதில் ஒன்று ரோட் ஷோ நடத்துவது. படத்தின் கதையில் நாடக கலைஞர்கள் தங்கள் நாடகத்தை விளம்பரப்படுத்த நாடகத்தில் போடும் வேஷங்களை கட்டி வாகனத்தில் ஊர் ஊராக செல்வார்கள்.
அதே பாணியில் பட ரிலீசின் போது சித்தார்த், பிருத்விராஜ், அனைகா, வேதிகா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் ஊர் ஊராக சென்று ரோட் ஷோ நடத்த இருக்கிறார்கள். இதுதவிர அந்தந்த ஊரில் உள்ள இளைஞர்களை நடிக்க வைத்து அவர்களில் நன்றாக நடிப்பவர்களுக்கு பரிசும் வழங்க இருக்கிறார்கள்.
இந்த தகவலை இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: சங்கராபரணம், சலங்கை ஒலி, சிந்து பைரவி, சிப்பிக்குள் முத்து போன்று இது ஒரு இசைப் படம். சங்கரதாஸ் சுவாமிகள், கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களோடு கற்பனை கதையும் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.