விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
கத்தி படத்துக்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்ததன் மூலம் கோடம்பாக்கத்தில் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறார் அனிருத். முன்வரிசையில் இருந்த சில இசையமைப்பாளர்கள் அவரது அதிரடி வளர்ச்சியினால் அதிர்ந்து போயிருக்கிறார்கள். இந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை, விஜயசேதுபதியின் நானும் ரெளடிதான் உள்பட 3 படங்களுக்கு பிசியாக இசையமைத்து வரும் அவர், அடுத்தபடியாக ரஜினிகாந்த் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் இசையமைக்கவும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
அதோடு, மான்கராத்தே, கத்திக்கு பிறகு வெளிநாடுகளிலும் தனது புகழ் பரவியிருப்பதை அடுத்து பெரிய அளவில் லைவ் இசை நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளாராம் அனிருத். அதன் முதல்கட்டமாக மலேசியாவின் கோலாலம்பூரில் பிரம்மாண்டமாக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளாராம். இந்த நிகழ்ச்சியில் முற்றிலும் தான் இசையமைத்த படங்களின் பாடல்களை மட்டுமே பாடப்போவதாக கூறியுள்ள அனிருத், அந்த பாடல்களை பாடிய பின்னணி பாடகர்-பாடகிகளையும் கூடவே அழைத்து செல்கிறாராம்.
மேலும், தமிழ் சினிமாவில் உள்ள பிரபல இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்றவர்கள் இதற்கு முன்பு வெளிநாடுகளில் நடத்திய லைவ் இசை நிகழ்ச்சிகளைப் போன்று தானும் நடத்தப்போவதாக தெரிவித்துள்ள அனிருத், சினிமாவில் பிசியாக இசையமைத்த போதும், இடையிடையே உலக நாடுகளில் உள்ள தமிழர்களுக்காக அவ்வப்போது இசை நிகழ்ச்சிகள் நடத்துவதையும் தொடரப்போகிறாராம்.