அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
ஜேஎஸ்கே சதீஷ்குமார் தயாரித்து வெளியிடும் படம் குற்றம் கடிதல். டிசம்பர் மாதம் திரைக்கு வரும் இப்படத்தை பிரம்மா இயக்கியுள்ளார். ராதிகா பிரசித்தா, சாய் ராஜ்குமார், மாஸ்டர் அஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. அப்போது தயாரிப்பாளர் சதீஷ்குமார் பேசுகையில்,
இந்த படத்தை கிறிஸ் பிக்சர்ஸ்தான் தயாரித்தனர். படத்தை எனக்கு திரையிட்டுக் காட்டியபோது, அந்த கதை வித்தியாசமாக இருந்தது. அதனால் கண்டிப்பாக இந்த படம் ரசிகர்களால் வரவேற்பு பெறும் என்பதால் நானும் இந்த படத்தில் இணைந்தேன். மானுட சமத்துவம் பற்றியும், தனி மனித விழிப்புணர்வு பற்றிய கதையிலும் தயாராகியுள்ள இந்த படத்தின் கதையோட்டம், ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை ரசிகர்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும். அப்படியோரு திரில்லரான ஸ்கிரிப்ட். 24 மணி நேரத்தில் நடக்கும் கதையில் உருவாகியுள்ள இந்த படம் ஏபிசி என எல்லா சென்டர் ரசிகர்களும் பார்த்து ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மேலும், ஏற்கனவே ஜிம்பாப்வே மற்றும் மும்பையில் நடந்த திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்த படத்திற்கு நல்லதொரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்தநிலையில், அடுத்தபடியாக இந்தியன் பனோரமா திரைப்பட விழாவில் திரையிடவும் தேர்வாகியிருக்கிறது. தமிழில் இருந்து 33 படங்கள் கலந்து கொண்டதில் இந்த குற்றம் கடிதல் மட்டுமே தேர்வாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நான் தயாரித்த பரதேசி, தங்கமீன்கள் போன்ற படங்களுக்கும் இதுபோன்ற திரைப்பட விழாக்களில் அங்கீகாரம் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த படத்திற்கும் இப்போது கிடைத்துள்ளது. மேலும், இது விருதுக்கான கதை என்றபோதும் வழக்கமான விருது படங்கள் போன்று ஷோலோவாக இல்லாமல் மற்ற கமர்சியல் படங்களைப்போன்றே விறுவிறுப்பாக கதையமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் ரசிகர்களுக்கு முழு திருப்தி கொடுக்கக்கூடிய படம் இது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும் என்கிறார் சதீஷ்குமார்.