ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிங்கம், சிங்கம்-2, அஞ்சான் என்று அடிதடி படங்களாக நடித்து வந்த சூர்யா, தற்போது வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தில் ஆவி கதையில் நடிக்கிறார். சமீபகாலமாய் திகில் படங்கள் நிறைய வந்து கொண்டிருப்பதால், ரசிகர்களின் ரசனை திகில் படங்கள் பக்கம் போய் விட்டதாக கருதி, அதே ரூட்டில் சூர்யாவும் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார். அதோடு, அப்படத்தின் கதையும் தற்போது வெளியில் கசிந்துள்ளது.
அதாவது, கிருஷ்ணா நடிப்பில் வெளியான யாமிருக்க பயமேன் என்ற படத்தில் இறந்தவர்களெல்லாம் மீண்டும் மனிதர்களாக நடமாடுவார்கள். எல்லோர் கண்களுக்கும் தெரிவார்கள். ஆனால் இந்த மாஸ் படத்தில் இறந்து போன சில ஆன்மாக்கள் சூர்யாவின் கண்களுக்கு மட்டுமே தெரிவார்களாம். அதாவது கல்யாணராமன் படத்தில் இறந்து போன கமல், இன்னொரு கமலின் கண்களுக்கு மட்டுமே தெரிவாரே அதேபோன்றுதானாம்.
மேலும், முதலில் யாரோ சிலர் தன்னை எங்கு சென்றாலும் பின்தொடர்வதை கண்டு டென்சனாகும் சூர்யாவுக்கு, அவர்கள் மற்றவர்களின் கண்களுக்கு தெரியாதபோதுதான், அவர்கள் ஆவிகள் என்பதை உணர்கிறாராம். அதையடுத்து, எதற்காக என்னையே தொடர்ந்து வருகிறீர்கள்? என்று ஆவிகளிடம் சூர்யா கேட்கும்போதுதான், தங்களுக்கு ஏற்பட்டுள்ள சில பிரச்சினையை சூர்யாவிடம் சொல்லி, அதை நிவர்த்தி பண்ணுமாறு கூறுகிறார்களாம். அதையடுத்து அவர்கள் ஒவ்வொருவரின் பிரச்சினைகளையும் சூர்யா எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதுதான் மாஸ் படத்தின் கதையாம்.
ஆக, இதுவரை நடித்த பல படங்களில் மனிதர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்து வந்த சிங்கம் சூர்யா, இப்போது ஆவிகளின் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க களமிறங்கி நிற்கிறார். அது என்ன பிரச்சினை? அதை எப்படி தீர்த்து வைக்கிறார்? என்பது படம் திரைக்கு வரும்போதுதான் தெரியும்.