காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
அஞ்சான் படத்தில் நடிப்பதற்கு முன்பு வரை டீசன்டாக நடித்து வந்தவர்தான் சமந்தா. ஆனால் அஞ்சான் படத்தில்தான் கிளாமராக நடித்தால் மார்க்கெட் பரபரப்பாகி விடும் என்று சொல்லி அவரை பிகினி உடையணிந்து நடிக்க வைத்தனர். அதனால் தனது ஹோம்லியான நடிகை என்கிற இமேஜை உடைத்தெறிந்து விட்டு கிளாமர் ரோலில் நடித்தார் சமந்தா.
ஆனால் அப்படி நடித்த அந்த படம் அவருக்கு கைகொடுக்கவில்லை.படம் தோல்வியடைந்ததோடு அவரது இமேஜையும் டேமேஜ் பண்ணியது. இந்த நிலையில், தற்போது விஜய்யுடன் அவர் நடித்து வெளியாகியுள்ள கத்தி படம் சமந்தாவுக்கு மறுபடியும் நல்லதொரு இமேஜை உருவாக்கியிருக்கிறது. கதைக்கு தேவையானபடி அசத்தலாக நடித்திருக்கிறார் என்று ரசிக கோடிகள் சபாஷ் கொடுத்து வருகின்றனர்.
அதனால் தமிழில் கத்தி மூலம் முதல் வெற்றியை அடைந்திருக்கும் சமந்தா, ரசிகர்கள் கிளாமரை விட கருத்தாழமுள்ள கதைகளுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறார்கள் என்பதையும் உணர்ந்திருக்கிறார்.
இதையடுத்து சமந்தா விடுத்துள்ள செய்தியில், கத்தி படத்தின் விமர்சனமும், எனது நடிப்பு குறித்த கருத்துக்களும் என்னை சந்தோசப்படுத்தியுள்ளன. ஒரு நல்ல படத்தில் நடித்தோம் என்ற திருப்தியில் இருககிறேன். மேலும், ரசிகர்களை கவர கிளாமர் தேவையில்லை. என்பதும் தெளிவாகி விட்டது அதனால் இனிமேல் நல்ல கதைகளில் மட்டுமே நடிப்பேன் என்பதை இந்த நேரத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.