ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய்யுடன் போக்கிரி, காவலன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அசின். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கியபோது, ஒரு படப்பிடிப்புக்காக இலங்கை சென்றார். ஆனால் அதை தமிழ்நாட்டிலுள்ள சில அமைப்புகள் எதிர்த்தன. அதற்கு, இந்தி படப்பிடிப்புக்காக இலங்கை செல்லும் நான், இப்போது இந்தி நடிகைதான். அதனால் தமிழ்நாட்டு சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பாட வேண்டிய அவசியமில்லை என்றும் தில்லாக பேட்டி கொடுத்தார்.
இதனால் டென்சனாகிப்போன தமிழ் ஆர்வலர்கள், இனிமேல் அசினை எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்க அனுமதிக்க மாட்டோம் என்று ஓங்கி குரல் கொடுத்தனர். அதனால்தான் இந்தியில் மார்க்கெட் இறங்கியபோது தமிழில் நடிக்க அசின் முயற்சி எடுத்தபோது எந்த இயக்குனர்களும் அதற்கு செவிசாய்க்கவில்லை. இவருக்கு சான்ஸ் கொடுத்தால் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்று கண்டுகொள்ளாமல் இருந்தனர்.
இந்தநிலையில், விஜய்யின் கத்தி படத்தை ராஜபக்சேவுக்கு ஆதரவான லைகா நிறுவனம் தயாரித்திருப்பதை சுட்டிக்காட்டி தமிழ் அமைப்புகள் கொடி பிடித்து வந்ததால், அதற்கு எதிராக தனது குரல் கொடுத்துள்ளார் அசின். அதாவது சினிமா வேறு, அரசியல் வேறு, அதனால் சினிமாவுக்கு எதிராக அரசியல்வாதிகள் குரல் கொடுப்பது முறையல்ல என்று கூறியிருப்பவர், இப்படி விஜய் படத்துக்கு எதிராக குரல் கொடுத்தவர்களுக்கு முன்பு கத்தி படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கி அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார் அசின்.