ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல ஒளிப்பதிவாளர் அசேக்குமார், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. ஒரு காலத்தில் தன் ஒளிப்பதிவால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் அசோக்குமார். இயக்குனர் மகேந்திரனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர். ஜானி, கை கொடுக்கும் கை, காளி, மன்னன், வெற்றி விழா, சூரியன், உல்லாசப் பறவைகள் உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில், 125 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் அசோக்குமார். அவர், காமாக்னி, அன்று பெய்த மழை படங்களையும் இயக்கியுள்ளார்.
கடந்த ஆண்டு, டிசம்பரில், ஐதராபாத் சென்றிருந்தபோது, திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால், அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பின், சென்னையில் வீட்டிலிருந்தவருக்கு, அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த 6 மாதமாக அவர் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அவருக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று(அக். 22ம் தேதி) தீபாவளி தினத்தன்று காலையில் அவர் உயிர் பிரிந்தது.
''நெஞ்சத்தை கிள்ளாதே'' படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது உட்பட, தமிழகம், ஆந்திரா, கேரள மாநில விருதுகளை பெற்றுள்ளார் அசோக்குமார். மறைந்த அசோக் குமாரின் உடல், அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.