மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சென்னையில், தீபாவளிக்கு நடிகர் விஜய்யின் "கத்தி திரைப்படம் வெளியாகவிருந்த திரையரங்கின் மீது நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். "கத்தி திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பாக ஏற்கெனவே சர்ச்சை இருந்து வந்த நிலையில், தீபாவளிக்கு வெளியாக இருக்கும் "கத்தி திரைப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் தியேட்டரில் நேற்று இரவு 11.30 மணியளவில் தொடங்கியது. அப்போது அங்கு வந்த 30-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், தியேட்டர் வாயிலில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்தெறிந்து, திரைப்படத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் தியேட்டர் மீது 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு ஓடினர். இதில் தியேட்டர் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. தியேட்டர் ஊழியர்கள் போராடித் தீயை அணைத்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.