ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நாம் ஆச்சரியப்படும் போது சொல்லும் ஒற்றை எழுத்தை தலைப்பாக வைத்து படமெடுத்து வரும் விருது தயாரிப்பாளர் மீது பிரம்மாண்ட இயக்குனர் கடும் கோபத்தில் இருக்கிறாராம். அந்தப் படம் ஆரம்பமான நாளிலிருந்து இதுவரை பட ரிலீஸ் வரை பல விஷயங்கள் திட்டமிட்டபடி நடக்காமல் போனதே அதற்குக் காரணம் என்கிறார்கள். அதோடு படத்தின் தயாரிப்பாளரே, பட்ஜெட்டைப் பற்றியும், மற்ற சில விஷயங்களையும் அவராகவே தன்னிச்சையாக ஒரு சில பத்திரிகையாளர்களை அழைத்து தகவல்களைச் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னபடி படத்தின் பட்ஜெட் 150 கோடி எல்லாம் இல்லை, வெறும் 100 கோடிக்குள்தான் என ஒற்றைப் பட பிரம்மாண்ட இயக்குனர் சமீபத்திய பேட்டி ஒன்றின் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார்.
பொதுவாகவே, எந்தப் படத்தைப் பற்றியும் வெளியீட்டிற்கு முன் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து எந்த தகவலையும் சொல்ல மாட்டார்கள், படத்தின் இயக்குனர்தான் அவற்றைப் பற்றிப் பேசுவார். ஆனால் ஒற்றைப் பட விருது தயாரிப்பாளர் தொடர்ந்து பத்திரிகைகளுக்கு செய்தி வழங்கி வருவதும் இயக்குனருக்கு எரிச்சலை ஏற்படுத்தியருக்கிறதாம். படத்தின் பட்ஜெட்டைப் பற்றி இயக்குனர் அப்படியே குறைத்துப் பேசியது தயாரிப்பாளருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். ஒன்றிரண்டு கோடிகள் பட்ஜெட்டில் அதிகமாகச் சொன்னால் பரவாயில்லை, பாதிக்குப் பாதி தயாரிப்பாளர் அதிகமாகச் சொல்லி எங்கே தனது பெயரை கெடுத்து விடுவாரோ என்று நினைத்துதான் இயக்குனர் உண்மையான பட்ஜெட்டை வெளியில் சொன்னார் என கோலிவுட் வியாபாரப் புள்ளிகள் தெரிவிக்கிறார்கள்.