மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
''பூவரசம் பூ பூத்தாச்சு...'' என்று ''கிழக்கே போகும் ரயில்'' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகை ராதிகா. பாரதிராஜாவின் அறிமுகமான இவர் அதன்பிறகு முன்னணி நடிகையாக உயர்ந்தார். எப்படிப்பட்ட கேரக்டரையும் அசால்ட்டாக நடிக்கும் திறன் கொண்ட ராதிகா, இப்போது சின்னத்திரையில் நடிப்பு-தயாரிப்பு, வெள்ளித்திரையிலும் நடிப்பு-தயாரிப்பு என்று பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரிடம் நடிப்பு, தயாரிப்பு, குடும்பம் என்று எல்லாவற்றையும் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டால்... எல்லாவற்றுக்கும் நேரமும், சரியான திட்டமிடுதலும் தான் காரணம் என்று பளீச் என பதிலளித்தார் ராதிகா. மேலும் யார் யாருக்கு எந்த வேலை என்று பிரித்து கொடுத்துவிட்டு, அவரவர்கள், தங்களது கடமையை சரியாக செய்தாலே எல்லாம் சிறப்பாக அமையும் என்கிறார். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவராக இருக்கும் ராதிகா, சின்னத்திரை சங்கத்திற்கு ஆக்கபூர்வமான செயல்களை செய்ய இருப்பதாகவும், அதில் ஒன்று சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கு சொந்தமாக கட்டடம் கட்ட இருப்பதாகவும் தெரிவித்தார். விரைவில் அதுப்பற்றிய முறைப்படி அறிவிப்பை வெளியிட இருக்கிறார் ராதிகா.