ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கரண் நடிக்கும் 75வது படம் கன்னியும் காளையும் செம காதல். இதனை தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை இயக்கிய வி.சி.வடிவுடையான் தயாரித்து, இயக்குகிறார். படத்தின் பணிகள் முடிவடைந்து இந்த மாதம் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ககன் போத்ரா என்ற சினிமா பைனான்சியர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கன்னியும் காளையும் செம காதல் என்ற படத்தை தயாரிக்கும் சிங்கம் சினிமாஸ் நிறுவனத்திடமிருந்து நெகட்டிவ், சார்ட்டிலைட் உள்பட அனைத்து உரிமங்களையும் 40 லட்சம் கொடுத்து நான் வாங்கியுள்ளேன்.
கடந்த ஏப்ரல் 18ந் தேதி இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில் அவர்களே படத்தை திரையிட ஏற்பாடு செய்து வருகிறார்கள், விளம்பரம் செய்து வருகிறார்கள். இது ஒப்பந்தத்தை மீறுவதாகவும், இதனால் எனக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். எனவே படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிமன்றம் படத்தை வருகிற 17ந் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்ததோடு படத் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.