Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மம்மூட்டிக்கு பிறகு சரத்குமார் தான்!

30 செப், 2014 - 14:47 IST
எழுத்தின் அளவு:

தற்போது சண்டமாருதம் என்ற படத்தில் நடித்து வரும் சரத்குமார், நீ நான் நிழல் என்றொரு படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஜான் ராபின்சன் என்பவர் இயக்கியுள்ளார். புதுமுகங்கள் அர்ஜூன்லால்-இஷிதா ஜோடி சேர்ந்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ விழா நேற்று இரவு 7 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது.


அப்போது டைரக்டர் ஜான்ராபின்சன் பேசுகையில், நான் தொட்டா சிணுங்கி, சொர்ணமுகி உள்பட பல படங்களை இயக்கிய கே.எஸ்.அதியமானிடம் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறேன். நான் வடஇந்தியாவில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் எனக்கு இந்தி தெரியும். அதனால் தொட்டா சிணுங்கி படத்தை இந்தியில் ஷாருக்கானை வைத்து, அதியமான் இயக்கியபோது தமிழ் ஸ்கிரிப்ட்டை இந்தியாக மாற்ற அவருக்கு உதவியாக இருந்தேன்.


அதன்பிறகு மலையாளத்திலும் இரண்டு படங்களில் பணியாற்றிய பிறகுதான் இப்போது இந்த நீ நான் நிழல் என்ற படத்தை இயக்கியுள்ளேன். சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஒரு நல்ல மெசேஜூம் உள்ளது. முக்கியமாக 13 முதல் 17 வயது வரை உள்ள தடுமாற்றமான பருவத்தில் நிகழும் கதை. அப்போது தங்களது பிள்ளைகளைப்பற்றி எல்லா பெற்றோருக்கும் பயத்தைப்பற்றி சொல்லியிருக்கிறேன். நாம் ஒருவருக்கொருவர் நிழலாக உள்ளோம். ஆனால் அந்த நிழலே ஆபத்தானால் என்ன நடக்கும் என்பதுதான் கதை.


மேலும், இந்த படத்தில் சரத்குமார் இன்வெஸ்டிகேஷன் ஆபீசராக நடித்துள்ளார். அன்வர் அலி என்ற பெயரில் அவர் நடித்துள்ள போலீஸ் வேடம் மிரட்டலாக இருக்கும். இதுவரை இன்வெஷ்டிகேசன் கதை என்றாலே மம்மூட்டிதான் என்று இருந்த நிலையில், இப்பேது சரத்குமாரும் இந்த கதையில் ஸ்கோர் பண்ணியிருக்கிறார். ஆக, மம்மூட்டிக்குப்பிறகு இன்வெஷ்டிகேசன் கதைகளில் நடிக்க இன்னொரு நடிகரும் இருக்கிறார் என்பதை சரத்குமார் அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in