ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
குழந்தை பெற்றபின் நடிக்காமல் இருந்து வந்த ஐஸ்வர்யா ராய், இப்போது ஒரு படத்தில் நடிக்க சம்மதம் சொல்லியுள்ளார். அது சஞ்சய் குப்தா இயக்கும் ஜாஸ்பா படம். இப்படத்தில் ஐஸ்வர்யாவுடன், இர்பான் கான் முக்கிய ரோலில் நடிக்கிறார். முன்னதாக இப்படத்தின் ஷூட்டிங் இம்மாதம் துவங்குவதவாக இருந்தது. ஆனால் தற்போது சஞ்சய் குப்தா இயக்கி வரும் மும்பை சகா படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியாததால் ஜாஸ்பா படத்தின் படப்பிடிப்பு தள்ளிபோய் உள்ளது.
இதுப்பற்றி விசாரித்ததில், மும்பை சகா படத்தில் நடிக்கும் ஜான் ஆபிரஹாம், வெல்கம் பேக் என்ற படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் இப்படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளதாம். இதனால் மும்பை சகா படத்தின் ஷூட்டிங் தாமதமாவதுடன், ஜாஸ்பா படத்தின் ஷூட்டிங்கும் தாமதமாகியுள்ளதாம். இருந்தாலும் டிசம்பரில் ஜாஸ்பா படத்தின் ஷூட்டிங் உறுதியாக ஆரம்பமாகும் என்று கூறியிருக்கிறார் இயக்குநர் சஞ்சய் குப்தா.