ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கரண் நடித்த கருப்பசாமி குத்தகைக்காரர் படத்தில் தமிழுக்கு வந்த கோல்கட்டா அழகி மீனாட்சிக்கு கோலிவுட்டில் பெரிய அளவில் படங்கள் இல்லை என்றாலும், தமிழ், கன்னட சினிமாவிற்கு படையெடுத்த அவரை அங்குள்ள இயக்குனர்கள் கண்டுகொள்ளாததால், மீண்டும் மீண்டும் கோடம்பாக்கத்துக்கே வந்து கொண்டிருந்தார். அவரது தொடர் முயற்சி காரணமாக தற்போது வில்லங்கம் என்ற படத்தில் நந்தாவுடன் நடிக்கிறார். அதோடு, தனுஷ் நடிக்கும் சூதாடி படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிப்பவர், விக்ரம்பிரபுவின் வெள்ளக்காரதுரை படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடுகிறார்.
இதை பார்த்த சிலர், கதாநாயகியாக நடிக்கும்போது குத்துப்பாட்டுக்கு ஆடி எதற்காக மார்க்கெட்டை கெடுத்துக்கொள்ள வேண்டும்? என்றார்களாம். அதைக்கேட்ட மீனாட்சியோ, குத்துப்பாட்டுக்கு ஆடுவதால் மார்க்கெட்டுக்கு எந்த பங்கமும் வராது. சொல்லப்போனால் இன்றைக்கு மார்க்கெட்டில் இருக்கிற நடிகைகளுக்குத்தான் அயிட்டம் பாடல்களில் ஆடும் வாய்ப்பே கிடைக்கிறது. அந்த வகையில் இந்த வாய்ப்பு கிடைத்த பிறகுதான் மீண்டும் தமிழில் எனது மார்க்கெட் உயர்ந்திருப்பதாக அறிகிறேன் என்றாராம் மீனாட்சி.