ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தலைப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டு விடாதீர்கள், ஏற்கெனவே உலகம் முழுவதும் 20000 திரையரங்குகளில் படத்தை வெளியிட உள்ளோம் என்று சொன்ன படத்தின் தயாரிப்பாளர்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொகையைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். ஐ படத்தின் டீஸர், சில காட்சிகள் ஆகியவற்றை ஹாலிவுட் நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் கம்பெனிக்கு போட்டுக் காட்டினாராம். அவற்றைப் பார்த்து அவர்கள் மிரண்டு போனார்களாம். அவர்களைப் போன்ற ஒரு பிரபலமான நிறுவனம் ஐ படத்தை உலகம் முழுவதும் வெளியிட்டால் 5000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலிக்கும் தகுதி ஐ படத்திற்கு உண்டு என்கிறார்.
இந்தியத் திரையுலகம் ஐ படத்திற்கு முன், ஐ படத்திற்குப் பின் என பிரிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். “இந்தப் படத்திற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உழைத்திருக்கிறார்கள். உலகமே இந்திய சினிமாவைத் திரும்பிப் பார்க்க வைக்கும், இயக்குனர் ஷங்கரை இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன் என்று சொல்வார்கள். ஒவ்வொருவரும் குடும்பத்துடன் படத்தைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள். இப்போதே அறுபது சதவீதத்திற்கும் மேலானவர்களை இந்தப் படம் சென்றடைந்துவிட்டது. அவர்கள் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார்கள், ஆந்திராவிலும் இதே நிலைமைதான்.
ஐ படத்தை உலகில் உள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறோம், அதற்கான வலிமை படத்திற்கு உண்டு. ஷங்கர் மற்றும் அவரது குழுவினரின் இந்த முயற்சிகளுக்கு நாங்கள் பெருமைப்படுகிறோம்,” என்று படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார்.