பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சமீபகாலமாக தான் எந்த மேடையில் ஏறினாலும் ஏதாவது ஒரு விசயத்தைப்பற்றி போட்டுத்தாக்கி விட்டுத்தான் இறங்குகிறார் டி.ராஜேந்தர். அந்த வகையில் நேற்றைய தினம் சென்னையில் நடந்த கல்கண்டு படத்தின் ஆடியோ விழாவில், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் காமெடியன்களை செம தாக்கு தாக்கினார்.
அவர் பேசும்போது, இன்றைக்கு ஆரம்பத்தில் பூனை மாதிரி வரும் நடிகர்கள் ஓரிரு படங்கள் ஹிட்டடித்ததும் புலியாக மாறி விடுகிறார்கள். ஒரு நாள் கால்சீட்டாக ஆயிரம், இரண்டாயிரம் என்று வாஙகியவர்கள் லட்சங்களை தாண்டி கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறார்கள். நான் அறிமுகம் செய்த ஒரு காமெடி நடிகர்கூட வெறும் 1500 ரூபாய் வாங்கிக்கொண்டுதான் என் படத்தில் நடித்தார். ஆனால் இப்போது அவர் சம்பளம் கோடிக்கணக்கில் என்கிறார்கள்.
முன்பெல்லாம் காமெடி நடிகர்கள் நியாயமாக சம்பளம் வாங்கினார்கள். அவர்களெல்லாம் ரசிகர்களை மட்டுமின்றி தயாரிப்பாளர்களையும் சிரிக்க வைத்தனர். ஆனால், இன்றைய சிரிப்பு நடிகர்களோ, ரசிகர்களை சிரிக்க வைத்தாலும், கோடி கோடியாக சம்பளம் தரும் தயாரிப்பாளர்களை அழ வைக்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்? என தானும் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் பேசினார்.