மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கடந்த வாரம் இணையதளங்களில் சக்கைப்போடு போட்டது டைரக்டர் அட்லி-நடிகை ப்ரியாவின் காதல் செய்தி. அதையடுத்து அவர்களும் அதை மறுக்கவில்லை. நிஜமாலுமே நாங்கள் காதலர்கள்தான் என்று ஒப்புக்கொண்டனர். அதோடு, எங்களது காதலுக்கு பிள்ளையார் சுழி போட்டவரே சிவகார்த்திகேயன்தான் என்று கூறியுள்ளார் அட்லி.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் இயக்கிய முகப்புத்தகம் என்ற குறும் படத்தில் நடித்தவர் சிவகார்த்திகேயன். அதிலிருந்துதான் எங்களது நட்பு வளர்ந்தது. அதன்பிறகு அடிக்கடி சிவகார்த்திகேயனை பார்க்க ஜோடி நம்பர்ஒன் நிகழ்ச்சிக்கு செல்வேன். அப்போதுதான் ப்ரியாவை சந்தித்தேன். அதையடுத்து எனது குறும் படத்தின் பிரிமியர் ஷோவுக்கு ப்ரியாவின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். அதனால் அவரது குடும்பத்தினரிடமும் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
அதையடுத்து நான் ப்ரியாவை காதலிக்கத் தொடங்கி விட்டேன். அதன்பிறகு தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாக ப்ரியா சொன்னபோது, என் போட்டோவை அனுப்பி வைக்கவா என்று அவரிடம் கேட்டேன். அதற்கு வீட்டிற்கு வந்து பேசுங்கள் என்றார். இப்படித்தான் நானும், ப்ரியாவும் இணைந்தோம். இப்போது நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. நவம்பரில் திருமணம். ஆக, நான் ப்ரியாவை சந்திப்பதற்கும், காதலிப்பதற்கும் காரணமாக இருந்தவர் சிவகார்த்திகேயன்தான் என்கிறார் அட்லி.