ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
ஆதித்யா சோப்ரா, ப்ரணீதி நடிப்பில் உருவாகியுள்ள படம் தாவாத்-இ-இஷ்க். இப்படம் நாளை ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை புரொமோட் செய்யும் விதமாக உணவு யாத்திரை என்ற பெயரில் ஆதித்யாவும், ப்ரணீதியும் கடந்த ஐந்து நாட்களாக ஊர் ஊராக சுற்றி வந்தனர். ஐந்தாம் நாளான நேற்று டில்லியில் ஆரம்பித்த உணவு யாத்திரை சண்டிகரில் முடிந்தது.
டில்லியில் உணவு யாத்திரையை முடித்த ஆதித்யா-ப்ரணீதி இருவரும் முர்தலுக்கு சென்றனர். பின்னர் ப்ரணீதியின் சொந்த ஊரான அம்பாலாவுக்கு சென்றனர். அங்கு ப்ரணீதியின் வீட்டில் அவருக்கும், ஆதித்யாவுக்கும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ப்ரணீதி தனது வீட்டிற்கு சென்றுள்ளார், அப்படியே தனது உறவினர்களையும் சந்தித்தார். ஆதித்யா-ப்ரணீதி வருவதை அறிந்து ஏராளமான பேர் அங்கு கூடிவிட்டனர், இதனால் கூட்டத்தில் ஆதித்யா மாட்டிக்கொண்டார், பின்னர் அவர் பாதுகாப்பாக ப்ரணீதியின் வீட்டுக்குள் அழைத்து செல்லப்பட்டார். சிறிது நேரம் குடும்பத்தாரோடு பொழுதை கழித்தார் ப்ரணீதி, கூடவே ஆதித்யாவும் அவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் இருவரும் விருந்தை முடித்து கொண்டு சண்டிகர் கிளம்பினர். அங்கு பஞ்சாபி உணவுவகைளை ரசித்து ருசித்து சாப்பிட்டு தங்களது உணவு யாத்திரையை முடித்தனர்.
கடந்த ஐந்து நாட்கள் இந்த உணவு யாத்திரையை மிகவும் ரசித்ததாகவும், பல்வேறு விதமான உணவுகளையும் ருசித்தாகவும் ஆதித்யாவும், ப்ரணீதியும் தெரிவித்துள்ளனர்.