ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கவியரசர் கண்ணதானின் உதவியாளராக இருந்து பின்னர் பாடலாசிரியராகி, தயாரிப்பாளர் ஆனவர் பஞ்சு அருணாசலம். ரஜினி, கமல், சிவாஜியை வைத்து 50க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர். 75க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர். அவருக்கு காரைக்குடி கவிஞர் கண்ணதாசன் சமூக நல அறகட்டளை சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இசைஞானி இளையராஜா விருதை அவருக்கு வழங்கி பேசியதாவது: என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தி எனக்கு இளையராஜா என்று பெயர் வைத்தவர் பஞ்சு அருணாசலம். காரைக்குடியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்காக நிறைய கச்சேரி செய்திருக்கிறேன். கண்ணதாசனை இங்கு சந்தித்து தேன் சிந்துதே வானம் பாடலை எழுதி வாங்கினேன். கண்ணதாசன் மாதிரி பாட்டு எழுதுகிறவர்கள் உலகத்திலேயே யாரும் கிடையாது.
பஞ்சு அருணாசலம் நல்ல தயாரிப்பாளர். ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கும் ஒரு படத்துக்கு இருவருக்கும் அட்வான்ஸ் கொடுத்திருந்தார். திடீரென்று இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்று முடிவு செய்தார்கள். இதற்காக பஞ்சு அருணாசலம் கலங்கவில்லை ரஜினியை வைத்து ஆறிலிருந்து 60 வரை படத்தையும் கமலை வைத்து கல்யாணராமன் படத்தையும் எடுத்து இரண்டையும் வெற்றி பெற வைத்தார். அவருக்கு இந்த விருது பொருத்தமானது. இவ்வாறு இளையராஜா பேசினார்.
விழாவில் கண்ணதாசனம் சமூக அறக்கட்டளை தலைவர் ஆர்.எம்.வீரப்பன், பொதுச் செயலாளர் அரு.நாகப்பன், பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், பாரதி ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.