ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
விக்ரம் நடிக்க, ஷங்கர் இயக்கும் ஐ படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கத்தில் நேற்று நடைபெற்றபோது... திருஷ்டிப்பரிகாரமாக பல சம்பவங்கள் நடைபெற்றன. அவற்றில் ஒன்று...அனிருத்துக்கு ஏற்பட்ட அவமரியாதை. புறத்தோற்றத்தில் சின்னப்பையன்போல் இருந்தாலும், அனிருத் இன்றைய தேதியில் முன்னணி இசையமைப்பாளர். இசையமைப்பாளராக அவர் அறிமுகமாகி சில வருடங்களே ஆகின்றன. மிக குறைவான படங்களுக்கே இசையமைத்திருக்கிறார். ஆனாலும் தன் திறமையால் தொடர்ந்து சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்த காரணத்தினால் தற்போது ஒரு படத்துக்கு இசையமைக்க ஒரு கோடி சம்பளம் வாங்குகிறார் அனிருத்.
அந்தளவுக்கு தமிழ்த்திரை உலகில் முக்கியமானவராக விளங்கும் அனிருத்தை அழைத்து ஐ படத்தில் பாட வைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். ஐ படத்தில் இடம்பெற்ற பாடல்களை, அதே பாடகர்களை வைத்து ஐ இசைவெளியீட்டு விழாவில் பாட வைத்தார்கள். அப்படி பாடுவதற்காக அனிருத்தை மேடைக்கு அழைத்தபோது, அர்னால்டை விட பெரிய பாடி பில்டர் நம்ம ஊரில் இருக்கிறார். இப்போது அவரை அழைக்கப்போகிறேன் - என்று கிண்டலாக சொல்லிவிட்டு அனிருத்தை அழைத்தார் சின்மயி.