ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெளி வரும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஜனவரி மாதம் முதல் இந்த வாரம் வரை எடுத்துக் கொண்டால் வாரத்திற்கு சராசரியாக 4 படங்கள் வெளியாகின்றன. இந்த எண்ணிக்கை இப்படியே தொடர்ந்து கொண்டு போனால் இந்த ஆண்டில் வெளிவரும் திரைப்படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டி விடும். இப்படி நடந்து விட்டால் இது நீண்ட வருடங்களுக்குப் பிறகு நடக்கும் ஒரு சாதனையாக அமையும். கடந்த 20 வருடங்களாக வருடத்திற்கு சராசரியாக 130 படங்கள் முதல் 150 படங்கள் வரைதான் வெளிவந்து கொண்டிருந்தது. கடந்த சில வருடங்களாக இந்த எண்ணிக்கை 150 என்ற வகையில் இருந்தது.
ஆனால், இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 150ஐத் தொட்டுவிட்டது. இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் சராசரியாக அதே 4 படங்கள் வாரத்திற்கு வெளிவரும் என்றால், இன்னும் 15 வாரங்கள் உள்ள நிலையில் சராசரியாக 60 படங்கள் வெளிவரும். அப்படியென்றால் 2014ம் ஆண்டில் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டிவிடும். இவற்றில் இதுவரை வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்கள் என்ற பார்த்தால் அவற்றின் எண்ணிக்கை 5 அல்லது 10க்குள் மட்டுமே இருக்கும். ஆக வெளிவந்த மொத்த படங்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது வெற்றி பெற்ற படங்களின் சதவீதம் 7% மட்டுமே.
டிஜிட்டலுக்கு திரையுலகம் மாறியதும், அனுபவமில்லாத பலர் இந்தத் திரையுலகில் நுழைந்ததும்தான் இந்த அளவிலான எண்ணிக்கைக்கும், வெற்றியின் குறைந்த சராசரிக்கும் காரணம் என்கிறார்கள் அனுபவம் வாய்ந்தவர்கள்.