ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மர்தாணி படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த பாலிவுட்டின் பார்வையையும் தன் பக்கம் திரும்ப செய்திருக்கும் நடிகை ராணி முகர்ஜி, சமீபத்தில் தனது குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசையை வெளிப்படுத்தினார். இதற்கு கரீனா கபூர்-சைஃப் அலிகான் தம்பதி வாழ்த்து தெரிவித்ததுடன் ராணி நிச்சயம் ஒரு நல்ல தாயாக இருப்பார் எனவும் கருத்து தெரிவித்துள்ளது.
ராணி முகர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் அதே வேளையில், தனக்கு இப்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் குறைந்தது 2 வருடங்கள் கழித்தே அதை பற்றி யோசிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் 33 வயதாகும் கரீனா கபூர். இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், குழந்தை பெற்றுக் கொள்வதற்காக பயப்படவில்லை. அது ஒரு இனிமையான அனுபவம்.
இருப்பினும் சரியான நேரம் வருவதற்காகவே காத்திருக்கிறேன். தற்போது நாட்டில் குழந்தைகளின் கல்வி மற்றும் குழந்தைகளின் உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் பிசியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். இருப்பினும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் தங்களுக்கு குழந்தை இல்லை என்ற கவலை வரும் போதெல்லாம், இருவரும் கரிஷ்மாவின் குழந்தைகளுடன் தங்களின் நேரத்தை செலவிடுகிறார்களாம்.
கரிஷ்மாவின் குழந்தைகளான சமீரா மற்றும் கியான் ராஜ், சைப் அலிகானின் குழந்தைகளான இப்ராஹிம் மற்றும் சாராவுடனேயே விளையாடுகிறார்களாம். தனது சகோதரி கரிஷ்மாவும், தாங்களும் ஒரே குடும்பமாக இருப்பதால் அவர்களுடனேயே அதிக நேரத்தை செலவிடுவதாக கூறும் கரீனா, வெளியில் சென்றிருந்தாலும் சார்பிடுவதற்கு வீட்டிற்கு வந்து அவர்களுடனேயே சாப்பிடுகிறாராம்.