ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான அமீர்கான், சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தனது சத்யமேவ ஜெயதே டிவி நிகழ்ச்சி மூலமும் அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் 3வது சீசன் தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் அமீர்கான் பேசினார். அப்போது அவர், நாட்டில் எத்தனை பேர் நேர்மையாக வரி செலுத்துகிறார்கள்? அரசுக்கு முறையாக வரி செலுத்தாமல் ஏமாற்றுபவர்கள் ஒவ்வொருவரும் நாட்டின் துரோகிகள் தான். அரசியல்வாதிகளிடம் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனிடமும் ஊழல் உள்ளது.
ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறை எம்.பி.,க்களை மாற்றுவதில் எந்த பயனும் இல்லை. அதற்கு பதில் முதலில் நாம் ஒவ்வொருவரும் நம்மை சுயபரிசோதனை செய்து, நம்மிடமுள்ள தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தாலே நாட்டின் மதிப்பு தன்னால் உயரும். சமூகத்திற்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினால் நாம் சமூக சேவகர் ஆக வேண்டியதில்லை, நாம் அனைவரும் அரசு சாரா ஒரு நிறுவனம் என்று நினைத்து செயல்பட்டாலே போதும் என தெரிவித்துள்ளார்.