மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நடிகை ப்ரியங்கா சோப்ரா, சினி உலக வாழ்க்கையில் தனது நடிப்பிற்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். தற்போது இவர் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள மேரி கோம் படத்தில், மேரி கோமாக நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்., 5ம் தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்தும், மேரி கோமாக வாழ்ந்தது பற்றியும் ப்ரியங்கா சோப்ரா மகிழ்ச்சி பட கூறியுள்ளார். அவர் கூறியதாவது,
மேரி கோமின் ரோல் சவாலாக இருந்தது
சராசரியாக நடிக்கும் ஹீரோயினை காட்டிலும், ஒருவரது வாழ்க்கை தொடர்பான கேரக்டரில் நடிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. மேரி மோமின் வாழ்க்கையில் நடிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. சிரமமாக இருந்தது என்பதை விட சற்று பயமாக இருந்தது, பெரும் சவாலாக கூட இருந்தது என்று சொல்லலாம். ஏன் என்றால் ஒருவரது வாழ்க்கையில் நடிக்கிறோமே என்ற பயம் தான். வரலாற்றில் மேரி கோமின் வாழ்க்கை புதைக்கப்பட்டுள்ளது.
இரண்டு பேருக்காக சம்மதித்தேன்
மேரி கோம் படம் தொடர்பாக இயக்குநர் ஓமங் குமார் என்னை வந்து சந்தித்தார். அவர் சொன்னவுடன் நான் நடிக்க தயாரானேன். ஆனபோதும், எனக்குள் ஒரு கேள்வி, இந்த ரோல் பண்ண நான் சரியான ஆள் தானா என்று....? இந்தப்படத்தில் நான் நடிக்க முக்கிய காரணமே தயாரிப்பாளர் சஞ்சய்யும், இயக்குநர் ஓமங் குமாரும் தான். இவர்கள் இருவரும் எனது நண்பர்கள். இந்தப்படத்தின் கதை எனக்கு பிடித்து இருந்தது. காரணம் இப்படத்தின் கதை ஒரு பெண்ணை பற்றியது என்பதால் தான். மேரி கோம் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற போது கூட பிரபலமாகவில்லை, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு தான் அவர் பிரபலமானார்.
இந்தியாவில் சானியா மிர்சா, பிடி.உஷா போன்ற நிறைய பெண் வீராங்கனைகள் உள்ளனர். நம் நாட்டில் பெண்கள் நினைத்தால் எதையும் மாற்றமுடியும். சில மாதங்களுக்கு முன் ஒரு கிராமத்திற்கு சென்றேன். அங்கும் பெண்கள் கல்வி, விளையாட்டு உள்ளிட்டவைகள் குறித்து பேசினேன். அப்போது அங்கிருந்த பெண்கள் சொன்னது என்னை சங்கடத்திற்கு உள்ளாக்கியது. அவர்கள் விளையாட்டை கற்றுக்கொள்ள ஆர்வமாய் இருக்கின்றனர், ஆனால் அவர்களுக்கு தேவையான வசதிகள் இல்லை என்ற சொன்னார்கள். மற்ற கல்வியை போன்று பள்ளிகளில் விளையாட்டையும் கற்று தர வேண்டும்.
மேரி கோம் படம் பற்றி இன்றி பலரும் பேசுகின்றனர். அதற்கு முக்கிய காரணமே படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் தான். அவர்கள் தான் இந்தப்படத்தை இவ்வளவு பெரிதாக பேச வைத்துள்ளனர். மேரி கோம் படத்தை அவர்கள் இவ்வளவு பெரிதாக உருவாக்கவில்லை என்றால், மேரி கோமின் சாதனையை யாரும் அறிந்து கொள்ள முடியாது. இந்தப்படத்திற்காக நான் 100 சதவீதம் எனது உழைப்பை கொடுத்துள்ளேன். மேரி கோமை பற்றி தெரிந்து, புரிந்து, அவரை பருகி அவரது கேரக்டராகவே வாழ்ந்துள்ளேன். இனி அதை வெற்றி பெற செய்வது ரசிகர்களாகிய உங்கள் கையில் தான் உள்ளது என்று கூறினார்.