ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட் நட்சத்திரங்களிலேயே விலை உயர்ந்த மதிப்பு மிக்க பங்களாவில் குடியேற இருக்கிறார் பிரியங்கா சோப்ரா. மும்பை கடற்கரையை ஒட்டியுள்ள வெர்சோவா பகுதியில் படப்பிடிப்புக்கு சென்றபோது பிரியங்கா சோப்ராவை அந்த பகுதியில் இருந்த ஒரு பங்களா கவர்ந்துள்ளது. அதைப் பற்றி உதவியாளர்களை விசாரிக்கச் சொன்னார். அது மும்பை தொழில் அதிபர் ஒருவருக்கு சொந்தமானது என்றும் அவர் தற்போது வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டதால் விற்க இருப்பதாகவும் விசாரணையில் தகவல்கள் கிடைத்தது.
பங்களாவை சுற்றிப் பார்த்த பிரியங்கா சோப்ரா விற்பனை ஒப்பந்தம் போட்டுவிட்டார். பங்களாவின் விலை 100 கோடி ரூபாய். 1930ம் ஆண்டு ஆங்கிலேயே பொறியாளர்களால் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த பங்களாவில் 15 படுக்கை அறைகள், நான்கு கிச்சன்கள், இரண்டு பார்ட்டி ஹால். மூன்று பார், பின்பகுதியில் சின்ன பூங்கா. முன் பகுதியில் குதிரை லாயம், கார் பார்க்கிங் என பக்காவாக கட்டப்பட்டுள்ளது. பங்களாவை பராமரிக்க மட்டும் 20 பணியாளர்கள் வேண்டுமாம். சினிமா உலகின் ராணி, இனி பங்களா ராணியாக இருக்கிறார்.
"100 கோடி ரூபாயெல்லாம் பிரியங்காவிடம் கிடையாது பங்களாவை வாங்கிக் கொடுத்திருப்பது அவருக்கு நெருக்கமான நடிகர்" என்ற கிசுகிசுவும் ஓடிக் கொண்டிருக்கிறது.