விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு கோல்கட்டாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக்கான் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சீருடை அணிந்த ஒரு பெண் போலீசை தூக்கி நடனமாடினார். மேற்கு வங்க முதல்வர் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியது. ஷாருக்கான் போலீசை அமவதித்து விட்டார் என்றும், மம்தா இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி விட்டார் என்ற குற்றச்சாட்டுகளை சில அமைப்புகளும், எதிர்கட்சிகளும் கிளப்பின.
இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 12) மும்பையில் இதுபற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஷாருக்கான் கூறியதாவது: நான் சில ஆண்டுகளுக்கு முன்பு வீர் ஷாரா படப்பிடிப்பின்போது அங்கு வந்த சீருடை அணிந்த ராணுவ வீரர்களுடன் நடனமாடி அவர்களை மகிழ்வித்திருக்கிறேன். 1960-70 காலகட்டத்தில் யுத்தம் நடந்தபோது அடிக்கடி எல்லைக்கு சென்று வீரர்களுடன் நடனமாடி அவர்களை உற்சாகப்படுத்தி வந்திருக்கிறேன். அதுபோன்ற ஒரு நிகழ்வுதான் இதுவும்.
நான் ஒரு கலைஞன், மற்றவர்களை சந்தோஷப்படுத்துவது என் வேலை. அதைத்தான் நான் செய்கிறேன். என் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை கூறி ஆணுக்கும், பெண்ணுக்குமான வேறுபாட்டை பெரிதாக்க முயற்சிக்கிறார்கள். இதை நான் முட்டாள்தனமானதாகவும், வேடிக்கையானதாகவும் கருதுகிறேன். இதற்கு மேல் இதுபற்றி பேச விரும்பவில்லை என்றார் ஷாருக்கான்.