ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் 'கான்'களின் ராஜ்ஜியம் நடைபெற்று வந்தாலும் அவர்களுக்குள் அடிக்கடி உரசல்கள் இருந்து கொண்டுதான் இருக்கும். முக்கியமாக ஷாரூக்கானுக்கும், சல்மான்கானுக்கும் அவ்வளவு பொருத்தம்...? இப்போது முன்னணியில் இருக்கும் சல்மான்கான், ஷாரூக்கான், ஆமிர்கான் ஆகியோர் ஒரேகால கட்டத்தில்தான் இந்தித் திரையுலகில் ஹீரோக்களாக நுழைந்தனர். சொல்லி வைத்தாற் போல் மூவருமே முன்னணிக்கு வந்துவிட்டனர். ஆனால், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பாதை. இவர்களில் சல்மான்கான் பக்கா கமர்ஷியல் ஹீரோவாக செட்டிலாகி விட்டார். சமீபத்தில் வெளிவந்த 'கிக்' படத்தையும் சேர்த்து தொடர்ச்சியாக 7 படங்கள் மூலமும் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய ஹீரோ என நம்பர் 1 இடத்தில் இருக்கிறார் சல்மான்கான்.
அதேசமயம், பாலிவுட்டில் நீண்ட நாட்களாகவே 'கிங்' என அழைக்கப்பட்டு வருபவர் ஷாரூக்கான்தான். இது பற்றி சமீபத்தில் வாய் திறந்திருக்கிறார் சல்மான் கான். “ஒரு 'கிங்' எப்படியும் இருந்துதான் ஆக வேண்டும். அவர் 'கிங்'காக இருப்பதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. எனது இடத்தை பின்னர் தேர்வு செய்து கொள்கிறேன், நான் தற்போது தவறான இடத்தில் இருக்கிறேன், ” என கொஞ்சம் உள்குத்துடனேயே பேசியிருக்கிறார். மக்கள் சல்மான் கானை எப்படி வேண்டுமானாலும் அழைக்கட்டும் ஆனால், வினியோகஸ்தர்கள் அவரை வசூல் ராஜா என்று தான் அழைத்து வருகிறார்களாம்.