பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
'கிக்' படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் புகைப்படக் கலைஞர்களுக்கும், சல்மான் கானின் பாதுகாவலர்களுக்கும் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சல்மான் கான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் இனி கலந்து கொண்டு புகைப்படம் எடுக்கப் போவதில்லை என புகைப்படக் கலைஞர்கள் சங்கம் தீர்மானித்தது. அதன் பின் சல்மான் கான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எந்த புகைப்படக் கலைஞர்களும் புகைப்படம் எடுப்பதில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ஆமீர்கான் மகள் நடத்திய முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட கால்பந்தாட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சல்மான் கான் வந்தார். அதுவரை பல பிரமுகர்களையும், திரைக் கலைஞர்களையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த புகைப்படக் கலைஞர்கள் சல்மான் கான் வந்ததும், புகைப்படம் எடுக்காமல் உட்கார்ந்துவிட்டனராம்.
இது அப்போது ஒரு சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இவற்றைப் பார்த்த ஆமீர்கான் புகைப்படக் கலைஞர்களிடம் சென்று அவர்கள் தரப்பு பிரச்சனை என்ன என்பதைப் பற்றிக் கேட்டிருக்கிறார். மேலும், இது சம்பந்தமாக சல்மான் கானிடம் தான் பேசி சமரசம் செய்வதாகவும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், புகைப்படக் கலைஞர்கள் இது தங்களது சங்கம் எடுத்த முடிவு என்றும், அடுத்து என்ன செய்யலாம் என சங்கம் சொல்வதைத்தான் தாங்களும் செய்வோம் என்று சொல்லியிருக்கின்றனர். ஆமீர்கான் இந்தப் பிரச்சனையை விரைவில் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்துவிடுவார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.