ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
படத்திற்கு பொருத்தமாக யங் அண்ட் பியூட்டிபுல் என்று பெயர் வைத்ததற்காகவே படத்தின் இயக்குநர் பிரான்சிஸ் ஓஸோனை பாராட்டலாம்.
பாரீஸ் நகரில் வசிப்பவர் இஸபெல்லா. 17 வயதாகும் அழகான மாணவி. பருவத்தின் பூரிப்பில் இருக்கும் இஸபெல்லா, கவலையின்றி வாழும் புதுமைப் பெண். நாம் ஏன் தப்பு செய்து பார்க்க கூடாது என்ற எண்ணத்தில் இன்டர்நெட் மூலம் ஆண்களுக்கு கம்பெனி கொடுப்பதாக அறிவிக்கிறார். 50 வயதாகும் பணக்காரர் ஒருவர் இஸபெல்லாவை தான் தங்கும் ஹோட்டல் ஒன்றின் அறைக்கு அழைக்கிறார். இஸபெல்லாவின் மனம் நோகாதபடி நடந்து கொள்கிறார். ஒருமணி நேரத்திற்கு 300 யூரோக்கள் தருகிறார் அந்த பணக்காரர். சில நாட்களில் மீண்டும் பள்ளிக்கு சென்று வருவது போல் நிறைய ஓட்டல்களுக்கு சென்று ஆண்களுக்கு கம்பெனி கொடுக்கிறார். அதன்மூலம் கிடைக்கும் பணத்தை ஒரு பையில் சேகரித்து வைக்கிறார்.
ஓரளவு அவளை அடிக்கடி அழைக்கும் ஜார்ஜெஸ் என்ற பணக்காரர் ஒரு சமயம் அவளுடன் ஓட்டல் ஒன்றில் உறவு கொள்ளும்போது, மாரடைப்பு வந்து இறந்துபோகிறார். அவர் பெயர் ஜார்ஜெஸ் என்பதை தவிர இஸபெல்லாவுக்கு வேறு எதுவும் தெரியாது. இதனால் அவரது குடும்பத்திற்கும் தெரிவிக்கவும் வழியில்லை. பயத்தில் அவரை அப்படியே விட்டுவிட்டு ஹோட்டலை விட்டு வெளியே வந்து விடுகிறார். ஆனால் அந்த ஹோட்டலில் இருக்கும் கண்காணிப்பு மேராவில் இஸபெல்லாவின் முகம் பதிவாகி விடுவதுடன் அவர் தான் கடைசியாக அவருடன் இருந்தார் என்ற விஷயமும் தெரிய வருகிறது. இதனால் இஸபெல்லாவை விசாரிக்க போலீஸ், அவளது வீட்டிற்கு செல்கிறது. ஆனால் இஸபெல்லா அங்கு இல்லை, அவரது தாயார் தான் இருக்கிறார்.
போலீஸார் கூறும் செய்தியை கேட்டு அதிர்ச்சிக்குள்ளாகிறார் இஸபெல்லாவின் தாயார். இஸபெல்லா வீட்டிற்கு திரும்பியதும், போலீஸ் அதிகாரிகளிடம் நடந்ததை கூறுகிறாள். போலீஸ் விசாரணையில் ஜார்ஜெஸ் மாரடைப்பில் தான் இறந்தார், இஸபெல்லாவை அவரை கொலை செய்யவில்லை என்பது உறுதியாகிறது. போலீசாரும் இஸபெல்லாவை விட்டுவிடுகின்றனர்.
தாயும்-மகளும் மனம் விட்டு பேசுகிறார்கள். அவ்வளவு எவ்வளவு பணம் இப்படி சம்பாதித்து வைத்திருக்கிறாள், என்னென்ன செய்தாள் என்று அனைத்தையும் விசாரிக்கிறார். தனக்கு தெரியாமல் தனது மகள், பல தடவை தவறு செய்திருப்பது குறித்து வருந்துகிறாள். ஒரு தாயாக அவளை சரியாக கண்காணிக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு அவளை வருத்தம் அடைய செய்கிறது.
சில வாரங்கள் கழித்து ஒரு நடுத்த வயதான பெண்மணி, இஸபெல்லாவை ஹோட்டலுக்கு அழைக்கிறார். எதற்காக அந்த பெண் தன்னை அழைத்தார் என்று புரியாத புதிராக இருக்கிறது. ஹோட்டல் அறைக்கு வந்ததும், தன்னை செக்ஸ்க்கு தான் அந்த பெண்மணி அழைத்தாள் என்று கருதி ஆடையை களையட்டுமா என்று இஸபெல்லா கேட்க, அதற்கு அந்த பெண்மணியோ, அதெல்லாம் வேண்டாம், நான் உன்னோடு பேச வேண்டும் என்று கூறுகிறார்.
என் கணவர் ஜார்ஜெஸ், வேறுசில பெண்களுடன் பழக்கம் கொண்டிருந்தார் என்று எனக்கு தெரியும், கடைசியாக அவர் இறப்பதற்கு முன் அவர் உன்னோடு இந்த ஹோட்டல் அறையில் தான் இருந்தார் என்பது எனக்கு தெரியும், ஆதனால் தான் இந்த அறையை புக் பண்ணி உன்னை இங்கு வரவழைத்தேன். உன்னை நான் தப்பு சொல்லவில்லை. அவர் கடைசியாக இந்த அறையில் தான் இருந்தார் என்பதால் நானும் இங்கு இருக்கலாம் என்று நினைத்து தான் உன்னை வர சொன்னேன் என்கிறார். இஸபெல்லாவையும் இருக்க சொல்கிறார். கொஞ்ச நேரத்தில் இஸபெல்லா கண்முழித்து பார்க்கையில், மேஜை மீது 300 யூரோக்கள் இருக்கிறது. திருமதி ஜார்ஜெஸ் அங்கு இருந்து சென்றுவிடுகிறார்.
மரைன் வாத் என்ற நடிகை தான் இஸபெல்லாவாக, டீன்ஏஜ் பெண்ணாக அற்புதமாக நடித்து இருக்கிறார். பல இடங்களில் காட்சி அமைப்பும், வசனங்களும் பளிச் என்று இருக்கிறது. இஸபெல்லாவின் தம்பி, அவள் முதல்தடவை டேட்டிங் போய் வந்த அனுபவத்தை அவளிடம் கேட்கும்போது, போட என்று வெட்கப்பட்டு பேசுவதிலாகட்டும், பள்ளி தோழிகளிடமும், தன் தாயுடனும் பேசும் இடத்திலாகட்டும், தன்னுடன் உறவு கொள்ள வரும் ஆண்களிடம் அவர் பழகும் விதமாகட்டும் அனைத்திலும் மின்னுகிறார். படத்தில் இஸபெல்லா, சில டாப்-லெஸ் காட்சிகளில் நடித்திருக்கிறார், அதேப்போல் உடல் உறவு காட்சிகளிலும் நடித்துள்ளார். ஆனால் அதில் விரசம் இல்லாமல் படமாக்கி இருக்கிறார்கள்.
டீன்-ஏஜ் பெண் இருக்கும் வீட்டில் அவளுக்கு அளவுக்கு மீறி சுதந்திரம் கொடுப்பதும், எந்தவித கட்டுப்பாடு இல்லாமல் அவளை விட்டுவிடுவதும், மேலைநாட்டு கலாச்சாரம், இணையதளம் சுதந்திரம் பெற்றோர்கள் சுதந்திரம் கொடுப்பதால் அவர்கள் எப்படி தப்பான வழிக்கு போகிறார்கள் என்பதை உணர்த்துகிறது இந்தப்படம்.
படத்தின் கடைசியில் இஸபெல்லா திருந்தி புது வாழ்க்கையை ஆரம்பிப்பது போன்று படத்தை முடிக்கிறார்கள். இந்த திரைப்பட விழாவில் மிகவும் அதிகமாக பேசப்பட்ட படங்களில் யங் அண்ட் பியூட்டிபுல் படமும் குறிப்பிடத்தக்கது.
- கோவாவிலிருந்து எஸ்.ரஜத் -