காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
கேரளத்து பைங்கிளி பார்வதி ஓமனக்குட்டனை துரதிர்ஷ்டம் துரத்துகிறது. பெரும் எதிர்பார்ப்புடன் உலக அழகிப் போட்டியில் பங்கேற்றபோது போட்டி நடைபெறுவதற்கு முன்னரே பயங்கர ‘பில்டப்’ கொடுத்தார். இதனால் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். அடுத்ததாக பில்லா–2 படத்தின் மூலம் வௌ்ளித்திரைக்கு அடி எடுத்து வைத்தார். ஆனால் அந்த படம் பெரிய அளவில் ஓடவில்லை. மேலும் அதில் பார்வதிக்கும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வகையிலான காட்சிகள் இல்லை. அவரை கோலிவுட் ஓரம் கட்டி வைத்திருந்தது. இதனால் பாலிவுட்டுக்கு படையெடுத்தார். அங்கும் அவரை யாரும் ஏறெடுத்து பார்க்கவில்லை. மலையாள திரையுலகமும் அவரை கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு புதிய தமிழ் படத்தில் அவருக்கு வாய்ப்பு வந்தது. பார்வதியும் சந்தோஷமாக சம்மதித்தார். ஆனால் சம்பள விஷயத்தில் சற்று கறார் காட்டினார். ஒரே செக்கில் 20 லட்சம் ரூபாய் வேண்டும் என்றாராம். ஆனால் தயாரிப்பாளரோ, ஆத்தாடியோவ் இவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன் என அலறியடித்தபடி ஓட்டம் பிடித்து நடிகை மோனிகா வீட்டில்தான் போய் நின்றாராம். இப்போது அந்த படத்தில் பார்வதிக்கு கல்தா கொடுக்கப்பட்டு மோனிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். பாவம் பார்வதி.