ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சலமான் கான் உடன் நடிக்க வேண்டும் என்ற கனவு, நனவாகிவிட்டதாக நடிகை சனா கான் கூறியுள்ளார். சிலம்பாட்டம் படம்மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சனாகான். அதன்பிறகு ஒருசில படங்களில் நடித்தவர் இப்போது தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சல்மான் கானின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று நடித்தார். அப்போதே சல்மானை ஆஹா... ஓஹா... என்று புகழ்ந்து வந்தார். அதன்பிரதிபலனாக இப்போது இந்தியில் தான் நடிக்கும் ஒரு படத்தில் சனா கானுக்கு வாய்ப்பு வந்திருக்கிறார் சல்மான் கான். படத்தின் பெயர் மென்டல்.
சல்மானுடன் நடிப்பது பற்றி சனாகான் மகிழ்ச்சி பொங்க கூறியிருப்பதாவது, சல்மான் கான் உடன் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு, அந்தக்கனவு இப்போது மென்டல் படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. இந்தியில் எனது திறமையை வெளிப்படுத்த இதுவே சரியான நேரம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் எனது திறமையை பார்த்து எனக்கு இந்த வாய்ப்பை சல்மான் கொடுத்து இருக்கிறார் என்று கூறியுள்ளார்.