ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்து, "தி அட்டாக் ஆப்-26/11 என்ற படத்தை, ராம்கோபால் வர்மா, இந்தியில் இயக்கியுள்ளார். இந்த படத்தை, தன் நண்பர்களுக்கும், பாலிவுட் பிரபலங்களுக்கும், சமீபத்தில் திரையிட்டுக் காட்டினார், ராம்கோபால் வர்மா. பாலிவுட்டின் மூத்த நடிகர், அமிதாப் பச்சனும், அவரது மகனும், பிரபல நடிகருமான, அபிஷேக் பச்சனும், இந்த படத்தை பார்த்தவர்களில் முக்கியமானவர்கள். படம் பார்த்து முடித்ததும், அமிதாப் பச்சனுக்கு, அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லையாம். கண்களிலிருந்து கண்ணீர், தாரை தாரையாக பெருக்கெடுத்து ஓடியதால், மற்றவர்கள், அவரை சமாதானப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, அமிதாப் கூறும்போது,"இந்த படம் முழுவதும், உண்மை நிறைந்திருக்கிறது. மும்பை தாக்குதல் சம்பவத்தில் பலியான அப்பாவிகளையும், அவர்களது குடும்பத்தினரின் நிலையையும் நினைத்துப் பார்த்தேன். என்னால், அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை என, கலக்கத்துடன் கூறியுள்ளார்.