ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
இந்த படத்தின் ஹீரோ, ஒருவித மன நோயால் பாதிக்கப்பட்டவர். இதன் காரணமாக, தன் வீடு, வேலை, மனைவி, என, அனைத்தையும், அவர் இழக்க நேரிடுகிறது. வயதான, தன் தாய், தந்தையர் ஆதரவுடன், ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, எட்டு மாதங்களுக்கு பின், குணமடைந்து திரும்புகிறார். அப்போது தான், தனக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் பற்றி, அவருக்கு தெரிய வருகிறது. இழந்தவற்றை, மீண்டும் அடைவதற்காக, மருத்துவமனையில், தன்னுடன் சிகிச்சை பெற்று வந்த நண்பரின் உதவியுடன், களம் இறங்குகிறார். அங்கே, அவர், ஏராளமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த சவால்களை முறியடித்து, இழந்தவற்றை திரும்ப பெறுகிறாரா என்பதை, த்ரில்லிங்காகவும், சுவாரசியமாகவும், விளக்கியுள்ளார், இயக்குனர், டேவிட் ஒ ரஸல். பிராட்லி கூப்பர், ராபர்ட் நீரோ, ஜெனிபர் லாரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம், இந்தியாவில், விரைவில் திரைக்கு வரவுள்ளது.