ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருது, தனக்கு கிடைத்த கவுரவம் என்று நடிகை ஸ்ரீதேவி பெருமிதத்துடன் கூறியுள்ளார். குடியரசு தினத்தையொட்டி 108 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்கியது. தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல நடிகை ஸ்ரீதேவிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து ஸ்ரீதேவி அளித்துள்ள பேட்டியில், பத்மஸ்ரீ விருது என்னை கவுரவப்படுத்தி உள்ளது. மத்திய அரசின் இந்த அங்கீகாரத்தை அடக்கத்துடன் ஏற்றுக்கொள்வதாக பெருமிதத்துடன் கூறியுள்ளார். தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு கடந்த 15 ஆண்டுகளாக திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்த ஸ்ரீதேவி, கடந்த ஆண்டு வெளியான இங்கிலீஷ் விங்கிலீஷ் இந்திப்படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்து இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.