ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல இந்தி நடிகை பூஜா பட்டுக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல இந்தி நடிகை பூஜா பட். இவருக்கு மர்மநபர் ஒருவர் போனில் மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பூஜாபட் கூறும் போது என் செல்போனில் மர்ம ஆசாமி ஒருவன் பேசினான். கேவலமாக என்னை திட்டினான். மிரட்டவும் செய்தான். அவன் யார் என்று தெரிய வில்லை. திட்டி தீர்த்த பிறகு போனை துண்டித்து விட்டான். இதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். மிரட்டல் விடுத்தவனின் போன் நம்பர் என் செல்போனில் பதிவாகி இருந்தது. உடனடியாக இது குறித்து போலீசில் புகார் செய்தேன் என்றார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்நிலையில் மிரட்டல் விடுத்த அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 25வயதுடைய வாலிபர் என்றும், அவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் என்றும் போலீசார் கூறியுள்ளனர். இதனை பூஜா பட்டும் உறுதி செய்துள்ளார்.