பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
இந்த ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை வருகிற 28ந் தேதி வருகிறது. அன்றைய தினம் தியேட்டர்கள் அனைத்தும் ஹவுஸ் புல்லாகிறது. அதாவது மக்கள் கூட்டத்தால் ஹவுஸ் புல் ஆகவில்லை. புதுப் படங்களால் ஹவுஸ் புல்லாகிறது. அன்றைக்கு பரங்கி மலை ஜோதி வரைக்கும் புதுப் படங்களால் நிறைந்து வழியப்போகிறது. ஆண்டுதோறும் அரசு திரைப்படங்களுக்கு வழங்கும் மானியத்தை பெறுவதற்காக இந்த ஆண்டு பட்டியியலில் இடம் பெறுவதற்காகவும், அரசு விருது (கொடுத்தால்) பெற இந்த ஆண்டுக்குள் இருப்பதற்காகவும் இந்த தள்ளுமுள்ளு. வெளியாகிற படங்களில் விஷால், த்ரிஷா நடித்த சமர் மட்டுமே பெரிய பட்ஜெட் படம். மற்ற அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள். பத்தாயிரம் கோடி, கோழிகூவுது, புதுமுகங்கள் தேவை, பயபுள்ள, அகிலன், லொள்ளு தாதா பராக் பராக், பாரசீக மன்னன், கண்டுபுடிச்சிட்டேன், உண்மை, மாமன் மச்சான், குறும்புக்கார பசங்க, நண்பர்கள் கவனத்திற்கு போன்ற படங்கள் வெளிவருகிறது. இன்னும் சில படங்கள் வெளிவரலாம். அல்லது வெளிவருவதாக அறிவித்துள்ள படங்கள் பின் வாங்கலாம்.
அதுசரி... வாரத்துக்கு 3 படங்கள்தான் ரிலீசாகணுங்ற தயாரிப்பாளர் சங்க விதி என்னாச்சுங்கோ...!