ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மும்பை நட்சத்திர ஓட்டலில், தகராறில் ஈடுபட்டு, வர்த்தகர் ஒருவரை தாக்கிய வழக்கில், பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் மீது, மும்பை போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான், சில மாதங்களுக்கு முன், நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் காதலர்களாக இருந்த போது, அடிக்கடி நட்சத்திர ஓட்டல்களில் சந்தித்து கொண்டனர். அந்த வகையில், பிப்ரவரி, 22ம் தேதி, மும்பையில் உள்ள தாஜ் ஓட்டலில் உள்ள வசாபி ரெஸ்டாரன்ட்டுக்கு கரீனா கபூருடன் சென்றார். அவர்களுடன், கரீனாவின் சகோதரி கரீஷ்மா மற்றும் சில நண்பர்கள் சென்றனர். அங்கு நடந்த விருந்தில், அவர்கள் அரட்டை அடித்து மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்களது அரட்டை கச்சேரி, அதே ரெஸ்டாரன்ட்டுக்கு வந்திருந்த, தென் ஆப்பிரிக்க வர்த்தகரான இக்பால் மிர் ஷர்மாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர், தன் மாமனாருடன் அங்கு சாப்பிட வந்திருந்தார்.
ஒரு கட்டத்தில், சயீப் குழுவினரின் கூச்சலை பொறுக்க முடியாமல், சயீப் அலிகான் குழுவினரை பார்த்து, அமைதியாக இருக்கும்படி ஷர்மா கேட்டுள்ளார். அது, வாக்குவாதமாகி தகராறில் முடிந்துள்ளது. சயீப்பும், அவரது நண்பர்களும் சேர்ந்து ஷர்மாவை தாக்கியுள்ளனர். இது குறித்து, மும்பை, கொலபா போலீஸ் நிலையத்தில், ஷர்மா புகார் செய்தார்.
புகாரை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சயீப் அலிகான் மற்றும் அவரது நண்பர்கள், ஷகில், பிலால் மீது மும்பை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில், 29 பேர் அளித்த வாக்குமூலம் இடம் பெற்றுள்ளது.ஏற்கனவே இந்த வழக்கில், சயீப்பும் அவரது நண்பர்கள் இருவரும், தங்களை போலீசார் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் பெற்றுள்ளனர்.