ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஹன்சிகாவுக்கு இப்போது சிம்பு மீது காதல் முத்திப்போச்சாம். படப்பிடிப்பில் கொஞ்சம் இடைவெளி கிடைத்தாலும் சிம்புக்கு எஸ்.எம்.எஸ்களை பறக்க விடுகிறார். பதிலுக்கு சிம்புவிடமிருந்து பறந்து வருகிறது எஸ்.எம்.எஸ். இவர்களின் எஸ்.எம்.எஸ்-ஆல் செல்போன் கீ போர்டே தேஞ்சுபோகுதாம். தினமும் படப்பிடிப்பு முடிந்ததும் இன்னிக்கு என்ன சீன் எடுத்தாங்க எப்படி நடிச்சேன்னு அக்கறையோடு விசாரிக்கிறாராம் சிம்பு. அண்மையில் நயன்தாரா ஒரு பார்ட்டி வைத்தார். அதற்கு சிம்புவுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் நயன். சிம்புவும் கிளம்பத் தயாரானார். கேள்விப்பட்ட ஹன்சி, சிம்புவை போனில் பிடித்து தாளித்து எடுத்துவிட்டாராம். பார்ட்டிக்கு போனா என்னை மறந்துடு என்கிற ரேஞ்சில் பேச சிம்பு பார்ட்டிக்கு போகாமல் தவிர்த்துவிட்டாராம். ஹன்சிகா, சிம்பு காதல்தான் இப்போது கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக்.
காதல், திருமணம் வரைக்கும் போகும்னு சொல்றாங்க. ஆனா சிம்புவோட அம்மாவுக்கு இவுங்க காதல் பிடிக்கலையாம். அதே மாதிரி சிம்புவைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கும் ஹன்சிகாவின் அம்மாவுக்கும் இவர்கள் காதல் பிடிக்கலையாம். சிம்பு தன்னோட புது காதல் அத்யாயத்தை தொடங்கிட்டாரு என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.