பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
மும்பையைச் சேர்ந்தவரான சதா, ஜெயம் ரவி அறிமுகமான ஜெயம் படத்தில் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர். அந்த படத்தில் பக்கா குடும்ப குத்து விளக்காக நடித்தவர், பின்னர் நடித்த அந்நியன் உள்ளிட்ட படங்களில் குத்து நடிகைகள் ரேஞ்சுக்கு துகிலுரிந்து நின்றார். என்றாலும் அடுத்தடுத்து நடித்த படங்கள் வீழ்ந்து விட்டதால் சதாவின் மார்க்கெட்டும் வீழ்ந்தது. அதனால் மீண்டும் மும்பைக்கே திரும்பியவர், அங்கிருந்தபடியே சில இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்டு கல்லெறிந்து கொண்டிருந்தார். அதன்பயனாக இரண்டொரு படங்கள் கிடைத்தாலும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
அதனால் சதாவை அவரது பெற்றோர் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால், முஸ்லீமான அவரது அப்பா, முஸ்லீம் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மல்லுக்கு நிக்கிறாராம். ஆனால் இந்து மதத்தைச்சேர்ந்தவரான அவரது அம்மா, எனது இந்து மதத்தில் நான் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் சதா திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வம்படியாக கோதாவில் குதித்திருக்கிறாராம். ஆக, இந்த கல்யாண கலவரத்தில் தேவையில்லாமல் சிக்கிக்கிடக்கும் சதா, அப்பா-அம்மா இருவரில் யார் பக்கம் சாய்வது என்பது புரியாமல் குழம்பிப்போயிருக்கிறார். இதையறிந்த அவரது நண்பர்கள் வட்டம், இந்துவை மணந்தால் அப்பா கோபிப்பார். முஸ்லீமை மணந்தால் அம்மா கோபிப்பார். அதனால் ஒரு கிறிஸ்தவ மாப்பிள்ளையை மணந்து கொள் என்று சதாவுக்கு ஐடியா கொடுத்திருக்கிறார்களாம். இதையடுத்து இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வு இதுதான் என்று தனக்கு பிடித்தமான கிறிஸ்தவ மாப்பிள்ளையை சீக்ரெட்டாக தேடிக்கொண்டிருக்கிறாராம் சதா.