ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே | விக்ரம் 65வது படத்தை இயக்கும் ‛பார்க்கிங்' இயக்குனர் | நாகார்ஜுனா Vs ஜுனியர் என்டிஆர் - கூடுதல் பலத்தைக் கொடுக்கப் போவது யார் ? | சீக்கிரம் சசி உடன் மீண்டும் ஒரு படம் : விஜய் ஆண்டனி | இப்பவே கூலி ரூ.200 கோடி லாபமா...? | சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக பரத் தேர்வு | இரண்டாவது வாரத்தில் தெலுங்கு திரையுலக ஊழியர்கள் ஸ்டிரைக் | உடல் மெலிந்து உருமாறிய தோற்றத்தில் அதிர்ச்சி அளித்த பிரபல குணச்சித்திர நடிகர் | மம்முட்டியை பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை : பெண் தயாரிப்பாளர் விளக்கம் |
இளையராஜாவை தமிழ் திரையுலகின் இசைஞானி என்றே அழைக்கின்றனர். அவரும் அப்படி அழைக்கப்படுவதையே விரும்புகிறார். அதோடு ஆன்மிக ஞானியாகவும் தன்னை பிரகடனப்படுத்திக்கொள்ளும் இளையராஜா, சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த "நீதானே என் பொன்வசந்தம்" படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கள்ளக்காதலன், கள்ளக்காதலி பற்றி பேசியதும், பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், இந்தியில் இருந்து ஒரு ட்யூனை எடுத்து தமிழில் போட்டு, அந்தப்பாடலை ஹிட் செய்ததை போட்டுக்கொடுத்ததோடு, நான் இதுவரை காப்பியடித்ததே இல்லை... என்று பேட்டி கொடுத்ததையும் கண்ட சீனியர் சினிமா விமர்சகர் ஒருவர், இசைஞானிக்குள் இன்னமும் பொறாமை ஞானி, கொளுந்துவிட்டு எரிந்து கொண்டு தான் இருக்கிறார் போலும்... என கிண்டலடித்தது மீடியா வட்டாரத்தில் மிரட்டலான சிரிப்பு சப்தத்தை ஏற்படுத்தியது உண்மை!
ஆமாம் ஞானிக்குள் ஏன் இன்னமும் இந்த காம, குரோத பொறாமை பவனி...?! இசை ராஜாவிற்கே வெளிச்சம்!!