ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காந்தக் கண்ணழகி, கையளவு இடுப்பழகி என்றெல்லாம் அழைக்கப்பட்ட இலியானாவுக்கு ஆந்திராவில் தற்போதைய மார்க்கெட் நிலவரமும் இருக்கா, இல்லையான்னு தெரியாமலையே இருக்கிறதாம். ஆந்திராவில் கொடி கட்டி பறந்த போது ஒரு சில ஹீரோக்களை இவர் ஒதுக்கிய காலம் போய், இவரை ஒதுக்குகிற காலம் வந்துவிட்டதாம்.
ஜீரோ சைஸ் உடல்வாகும், இளைக்கவே இளைக்காத அவரது சம்பளமும்தான் இதற்கு காரணம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
அதற்காக அப்படியே இருந்து விட முடியுமா என்ன, சமீபத்தில் சென்னைக்கு வந்தவர் முக்கியமான இரண்டு இயக்குனர்களை அழைத்து சம்பளத்தை பெருமளவு குறைத்துக் கொள்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்தவர், தனக்காக ஒரு கதையை உருவாக்க சொல்லியிருக்கிறாராம். வழக்கம் போல் வந்தவரை வாழ வைக்குமா தமிழ் மண்?!