ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடிக்கும் படங்கள் சுமாராக இருந்தால் கூட நன்றாக விளம்பரப்படுத்தி மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க நினைப்பார்கள். செலவு செய்த தொகையில் பாதியையாவது வசூலித்துவிட வேண்டும் என்று தான் செயல்படுவார்கள். ஆனால், கடந்த வாரம் வெளியான பெண் பேயின் படத்தை தயாரிப்பாளர் வேண்டா, வெறுப்பாகவே ரிலீஸ் செய்திருக்கிறாராம்.
நாயகி தரப்பில் கேட்டுக் கொண்டதற்காகவே பட வெளியீட்டிற்கு முன்பு பெயருக்கு ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறார்கள். படத்தை பத்திரிகையாளர்களுக்குப் போட்டுக் காட்டவும் தயாரிப்பாளர் மறுத்துவிட்டாராம். விமர்சனங்கள் வராமல் இருந்தாலே சிலராவது தியேட்டர் பக்கம் வருவார்கள். விமர்சனங்கள் வந்தால் வரும் அந்த சிலர் கூட வராமல் போய்விடுவார்கள் என்று சொன்னதாகவும் தகவல்.
ஏற்கெனவே, அந்த மூன்றெழுத்து நாயகி நடித்து இதற்கு முன் வெளிவந்த பேய் படத்திற்கும் அப்படித்தான் நடந்தது. அப்படி ஒரு படம் வந்ததே பலருக்கும் தெரியாது. அது போலவே போன வாரம் வந்த படத்தின் நிலைமையும் ஆகிவிட்டதாம். படம் அவ்வளவு மோசமில்லை, சுமாராகவாவது ஓடியிருக்கும். ஆனால், தயாரிப்பாளர் இப்படி முடிவெடுக்க வேறு ஒரு காரணம் இருக்கிறது என திரையுலக வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள். இந்தப் படத்தின் தடுமாற்றத்தால், நாயகியை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து படங்களை எடுத்து வெளியீட்டிற்காகக் காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தவிப்பில் இருக்கிறார்களாம்.
அந்த நம்பர் நடிகையைப் போன்று தனி ஹீரோயினாக வர வேண்டும் என இந்த நம்பர் நடிகை முயற்சித்தது மீண்டும் தோல்வியில் முடிந்திருக்கிறது.