ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
உச்ச நடிகரின் படத்தில் உமி நடிகையை நடிக்க வைத்ததில் இருந்தே பிரமாண்டத்துக்கு பிரச்சினைகள் தான். முதலில் படப்பிடிப்பில் தண்ணி தம்மு என்று ஜாலியாக இருந்தார். அதை கண்டித்து நிறுத்தினார். பின்னர் சொந்த ஊருக்கு சென்று பாய்பிரண்டுகளுடன் பிகினியில் போஸ் கொடுத்து பேஸ்புக்கில் பதிவேற்றினார். படத்தோட இமேஜ் போயிடும்னு அதையும் தடுத்து நிறுத்தினார். படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் செல்போனில் படம் எடுத்து பேஸ்புக்கில் போட்டார் படத்தோட சீக்ரெட் லீக் ஆகிடும் என்று அதையும் கண்டித்து நிறுத்தினார். இதையெல்லாம் விட இப்போது அவர் செய்தது தான் பிரமாண்ட இயக்குனரையே மிரள வைத்து விட்டது.
நடக்கப்போகிற இடைத் தேர்தலில் ஒரு அணி, உமி நடிகைக்கு அரசியல் எதுவும் தெரியாது. எழுதிக் கொடுத்ததை மேடையில் பேசிசிட்டு போய்விடுவார் என்ற கணக்கு போட்டு ஒரு பெரிய தொகையை பேசியதாம். முன்பணமும் கொடுத்தாக கூறப்படுகிறது. விஷயத்தை கேள்விப்பட்ட பிரமாண்டம் நடிகையை தடுத்து நிறுத்துவற்குள் படாதபாடு பட்டுவிட்டாராம்.