ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
குட்டிப் பையன் மாதிரிதான் இருப்பார் அந்த நடிகர், ஆனால், அவருடைய காதல் லீலைகள் மாநிலம் விட்டு மாநிலம் கடந்தும் புகழ் பெற்ற ஒன்று என்பது அந்தந்த மாநில உச்ச நடிகர்களுக்கும் தெரியும். சில வருடங்களுக்கு முன்பு உலக நடிப்புக்கே நாயகனாக இருப்பவரின் மகளுடன் அவர் நெருக்கமாகப் பழகியது ஐதராபாத், மும்பை என மாநிலம் விட்டு மாநிலம் மாறிக் கொண்டேயிருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில் ஐதராபாத்தில் கையும், களவுமாக சிக்கியவரை அன்பான மிரட்டலுடன் அடக்கி வைத்தார்கள். அதன் பின் ஐதராபாத்தை விட்டு தங்களது இருப்பிடத்தை மும்பைக்கு மாற்றிக் கொண்டார்கள். இப்போதும் அவர்களுக்கிடையேயான அந்த அன்பு அடிக்கடி தொடர்கிறது என்கிறார்கள்.
இருந்தாலும் அந்த குட்டி நடிகர் தற்போது மில்க்கின் மந்திரத்தால் கட்டுண்டு கிடக்கிறார் என்கிறார்கள். அதனால்தான் அவருக்காகவே கணக்கான ஒரு படத்தை தயாரித்திருக்கிறார். அந்தப் படம் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தியதைப் பற்றிக் கூட அவர் கவலைப்படவில்லை. அடுத்து தன்னுடைய நார்த் படத்திலும் நடிக்க வைக்கும் பணிகளில் இறங்கிவிட்டார். இடையில் சில காலம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற உச்ச நடிகருக்கு இந்த விஷயங்கள் காதுக்கு எட்டியுள்ளன. உடனே அவரும் பஞ்சாயத்தில் இறங்கியிருக்கிறார். சில பல சமரசப் பேச்சுகளுக்குப் பிறகு மருமகன் நடிகரின் தயாரிப்பில் ஒரு படம் நடித்துக் கொடுக்க சம்மதித்திருக்கிறார். ஆனால், ஒரு கண்டிஷனுடன். மருமக நடிகர் தயாரித்து நடிக்கும் நார்த் படத்தில் மில்க் நடிகை நாயகியாக நடிக்கக் கூடாது, அவருடன் இனி எந்த தொடர்பும் கூடாது என்பதுதான் அந்த கண்டிஷன். மருமகனும் அதற்கு சம்மதித்துவிட்டார் என்கிறார்கள். இவ்வளவு நடந்த பிறகும் சிலர் மருமகன் மீதுள்ள அன்பால் தான் அவர் கால்ஷீட் கொடுத்தார் என சொல்லிக் கொண்டு திரிவது எவ்வளவு அப்பாவித்தனமானது.