ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அரசியல்வாதியாக மூன்று அடிப்படைத் தகுதி அவசியம் இருக்க வேண்டும். அவை, பேச்சு... பேச்சு... பேச்சு... இந்தத் திறமை இல்லாதவர்கள், ஒரு பேச்சுக்குகூட, "அரசியல் பக்கம் போகப்போறேன்' என பேசக்கூடாது. உணர்ச்சி மிகுதியில் அப்படிப் பேசிவிட்டால், படமெடுத்து பரிகாரம் தேட வேண்டும். அப்படி ஓர் அல்லாடத் தேடலில் ஆழ்ந்துள்ளார், "கொடுமீன்' நாயகன். இலங்கைத் தமிழருக்காக டில்லிக்கு தந்தியடிக்கச் சொல்லி தனியாவர்த்தனம் செய்த கையோடு, மத்திய அரசின் இளம் ஸ்டாரை சந்தித்து திரும்பினார். இந்தச் சந்திப்பு, உலகமெங்கும் உள்ள இலங்கைத் தமிழர்களின் வெறுப்பை சம்பாதித்து தந்தது.
சகுணம் பார்க்க ஆரம்பிச்சா, எதிர்ல புலி வந்தாலும் பூனையாத்தான் தெரியும் என்பது போல், அவர் அச்சப்பட்ட மாதிரியே அடுத்தடுத்த படங்கள், "மியாவ்' போட்டன. இதிலிருந்து எப்படி வெளிவரலாம் என நினைத்த நடிகர், இலங்கைத் தமிழர்களின் அவலங்களை சொல்லும் கதை ஒன்றில் நடிக்க உள்ளார். நெத்திப் பொட்டில் குத்தீட்டி வைத்த மாதிரி எதையாவது சொல்லிவிட்டால், அரசு அதிகாரிகளின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிவரும் என்ற அச்சமும் அந்த நடிகருக்கு இருக்கிறது. இதனால், "பட்டும் படாமலும் பற்றை வெளிக்காட்டப் பாருங்கள்' என புதிய கட்சிக்கார டைரக்டரிடம் அவர் குழைந்து வருகிறாராம். இதையேதான் சொல்கிறாராம் புலிக்கலை தயாரிப்பாளரும்!