ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் இதற்கு முன் நடித்த சில படங்கள் தோல்வியடைந்ததால் தெலுங்குப் பக்கம் தாவினார் சென்னையைச் சேர்ந்த அந்த நடிகை. விண்ணைத் தாண்டிய இயக்குனரின் தயவால் தெலுங்கில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்தார். தொடர்ந்து அங்கு அவர் நடித்த படங்கள் வெற்றிப் படங்களாகவே அமைய சில வருடங்களிலேயே முன்னணி நடிகை எனவும் பெயர் பெற்றார். நீண்ட இடைவெளிக்குப் பின் மொத்த வித்தையையும் இறக்கிய இயக்குனரின் அஞ்சாத படத்தில் நாயகியாக நடித்தார். படம் வெளிவந்து தோல்வியடைந்தாலும் அடுத்து நடிக்கும் தளபதி நடிகரின் படத்தை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படம் கை கொடுத்தால்தான் இங்கு ராசியான நடிகை என பெயரெடுக்க முடியும். அது ஊத்தி விட்டால் அவ்வளவுதான், மீண்டும் தெலுங்குப் பக்கமே போக வேண்டியதுதான். இதனிடையே, அவர் தமிழில் நடித்து வரும் பெயரிடப்படாத படம் ஒன்றின் இயக்குனரை கொஞ்சம் டீசன்ட்டான வார்த்தைகளால் திட்டியதாக செய்திகள் பரவி வருகின்றன. ஒரு காட்சியை எடுக்கும் போது அது சரியாக அமையாமல் போயிருக்கிறது. அதனால், இயக்குனர் ரீடேக் மேல் ரீடேக் எடுத்தாராம். அதனால், கோபமடைந்த நடிகை சமர்த்தாக, சாந்தமாக இல்லாமல் சண்டை போட்டிருக்கிறார். நிஜ வாழ்க்கையில் பல உதவிகளை செய்து நல்ல நடிகை என்று பெயர் எடுத்து வருபவர் இப்படி கோபமாக நடந்து கொள்கிறாரே என்பதுதான் கோலிவுட்டில் பேச்சாக இருக்கிறது.