ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்த ஜென்டில்மேனான அந்த இயக்குனர் தற்போது இயக்கி வரும் ஒற்றை எழுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான விருது நிறுவனம் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம். அந்த நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே திட்டமிட்டபடி படத்தை வெளியிடாமல் பல காரணங்களுக்காக படத்தை தாமதப்படுத்தி வெளியிட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த மாதம் அவர்கள் தயாரிப்பில் வெளிவந்த 'கல்யாணம்' படம் முடிந்து பல மாதங்களான பின்னரும் தேதியை அறிவித்து, அறிவித்து தள்ளி வெளியிட்டதால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமலே போய்விட்டது என்கிறார்கள்.
தற்போது வெற்றியை தன்னுடைய பெயருடன் இணைத்திருக்கும் நாயகன் நடித்துள்ள 'உலகம்' படத்தையும் இதோ, அதோ என்று தள்ளித் தள்ளி வெளியீட்டுத் தேதியை சொல்லிக் கொண்டேயிருக்கிறார்களாம். அதோடு உலக நாயகன் நடிக்கும் படம் வேறு தயாராகி முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறதாம். இப்படி பெரிய படங்களால் விருது நிறுவனம் விக்கித்துப் போயிருக்கிறதாம். ஒரு படத்தை முடித்து விட்டே வெளியிட முடியாமல் தவிக்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் ஒரே நேரத்தில் இத்தனை படங்களை ஆரம்பித்து வைத்து எதற்கு தடுமாற வேண்டும் என்று பிரம்மாண்ட இயக்குனர் ஒரு யோசனை சொன்னாராம். அதாவது, அவருடைய பிரம்மாண்ட ஒற்றை எழுத்து படத்தை வேறு நிறுவனத்திற்கு தானே மொத்தமாக வியாபாரம் செய்து கொடுத்துவிடுகிறேன், அவர்களுக்குத் தாருங்கள் என்றாராம். ஆனால், விருது நிறுவனம் அதெல்லாம் முடியாது, தாங்களே படத்தை வெளியிட்டுக் கொள்கிறோம் என்று கறாராக சொல்லி விட்டார்களாம். இதனால் அந்த நிறுவனத்தின் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம் பிரம்மாண்ட இயக்குனர். இரண்டு வருடமாக கஷ்டப்பட்டு எடுத்த படம், சரியான நேரத்துல வந்து ஆச்சரியப்படற வெற்றியைத் தரணுமேன்னு கவலையாக இருக்கிறாராம் இயக்குனர்.