ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
லட்சுமிராயின் பெயர் சினிமாவில் பேசப்பட்டதை விட, கிரிக்கெட் வீரர்களுடன் கிசுகிசுக்கப்பட்டதுதான் அதிகம். அந்த வகையில் சினிமாவுக்கு அவர் வந்து சில ஆண்டுகளிலேயே இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனியுடன் நெருங்கிய நட்பு வளர்த்து வந்தார். அவர் எந்த நாட்டில் விளையாட சென்றாலும், அங்கு முதல் ரசிகையாக ஆஜராகி விடுவார் லட்சுமிராய்.
அதையடுத்து, இன்னொரு கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்துடனும் கிசுகிசுக்கப்பட்டார் லட்சுமிராய். இப்படி இருந்த நேரத்தில்தான், திடீரென்று கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் சிக்கினார் ஸ்ரீசாந்த். இதனால், அவருக்கு தொடர்புடைய அனைத்து பிரபலங்களிடமும் விசாரணை முடுக்கி விடப்பட்டது. அதில் லட்சுமிராயிடமும விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அவர் எனக்கு ஜஸ்ட் ப்ரண்ட் மட்டுமே. மற்றபடி சூதாட்டத்தில் ஈடுபடும் அளவுக்கு நெருக்கம் கிடையாது என்று சொல்லி எஸ்கேப் ஆனார்.
ஆனால், இந்த நேரத்தில் ஸ்ரீசாந்துடன், கட்டிப்புரண்டபடி லட்சுமிராய் முன்பு நடித்த விளம்பர படமொன்றின் போட்டோக்கள் தற்போது ஐதராபாத், பெங்களூரில் வெளியாகியுள்ளதாம். மீடியாக்கள் இதை, அடுத்த சர்ச்சையாக்கி வருகிறதாம். இதனால் பிரச்னை முடிந்த நேரத்தில் இதென்ன புதுப்பிரச்னை என்று மூடுஅவுட்டில் இருக்கும் லட்சுமிராய், படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதில் கூட ஆர்வம் இல்லாமல் இருக்கிறாராம்.