ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அறிமுகமான அந்த சேதுபதி நடிகரின் கையில் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களுக்குப்பிறகு அரை டஜன் படங்கள் உள்ளன. மேலும், விஜய், அஜீத், சூர்யா போன்ற நடிகர்களுக்கு பின்னால் கதைகளுடன் திரிந்து கொண்டிருந்த இயக்குனர்களும் இப்போது இவர் பக்கம் வந்து விட்டனர். அதனால் இப்போது நடிகர் நினைத்தால் இன்னும் ஒரு டஜன் படங்கள் வரை பாக்கெட்டில் பிடித்து போடலாம். என்றாலும், நடிகர் ஒவ்வொரு அடியையும் பாத்து கவனமாக எடுத்து வைக்கிறார். மேலும்,. தான் நடிக்க வேண்டிய கதைகளை எச்சரிக்கையும் தேர்வு செய்யும் நடிகர், தற்போது தன்னுடன் நடிக்க வேண்டிய நடிகைகளையும் தானே தேர்வு செய்கிறாராம்.
குறிப்பாக, அட்டகத்தி படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்த ஐஸ்வர்யா என்ற நடிகையின் நடிப்பு மேற்படி நடிகருக்கு ரொம்ப பிடித்து விட்டதாம். அதனால் தான் நடித்து வரும் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களுக்கு அந்த நடிகை கண்டிப்பாக வேண்டும் என்று பலத்த சிபாரிசின் பேரில் புக் பண்ணியுள்ளாராம் நடிகர். அதோடு, புதிதாக தன்னிடம் கதை சொல்லியிருப்பவர்களிடமும் மேற்படி நடிகையின் பெயரை முன் வைத்திருக்கிறாராம்.
இந்த அளவுக்கு அந்த நடிகைக்கு வி.சேதுபதி நடிகர் சிபாரிசு செய்வதற்கு ஏதாச்சும் உள்குத்து இருக்கிறதா? என்று விசாரித்தபோது, ஒரு சினிமா நிகழச்சியில்தான் நடிகரை சந்தித்தாராம் நடிகை. அவர் பக்கத்தில் பத்து நிமிடம் உட்கார்ந்திருந்தவர், நடிகர் மயங்கி சாயும் அளவுக்கு ஏதோ காதுகளில் கிசுகிசுத்துக்கொண்டிருந்தாராம். அதையடுத்துதான் இப்படி மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி அந்த நடிகையின் பெயரையே அவர் உச்சரித்துக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.