ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வடிவேலுவின் காமெடி நாற்காலி நொடிந்த பிறகு புது நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டவர் சந்தானம். படத்துக்குப்படம் ஹீரோக்களை கலாய்த்தபடி கவுண்டமணி பாணியில் காமெடி செய்து வந்தார். இந்த நிலையில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் சந்தானத்துடன் ஒட்டிக்கொண்டவர்தான் டாக்டர் சீனிவாசன் என்கிற பவர்ஸ்டார். ஒரு டம்மி பீஸை கூடவே வைத்துக்கொண்டால் இஷ்டத்துக்கு கலாய்க்கலாம் என்றுதான் அவரை கூட்டணியில் சேர்த்தார் சந்தானம். ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாகி விட்டது. சந்தானத்தை புக் பண்ண வருபவர்கள், கண்டிப்பாக பவர்ஸ்டாரும் வேண்டும் என்கிறார்களாம். இதனால் பவர்ஸ்டார் நடிக்க மறுத்தால் நம்மையும் கழட்டி விட்டு விடுவார்கள் போலிருக்கிறதே என்று விழிபிதுங்கிப்போய் இருக்கிறார் சந்தானம்.
இந்த நிலையில், புதிய படங்களுக்கு தன்னை புக் பண்ண வருபவர்களிடம் படத்துக்கு 50 லட்சம் என்று சம்பளத்தை பிக்ஸ் பண்ணி விட்டாராம் பவர்ஸ்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சந்தானம், நான் வளர்த்து விட்ட அவருக்கே 50 லட்சம் என்றால், 30 நாள் முதல் 35 நாடகள் வரை கால்சீட் வேண்டும் என்றால் எனக்கு 2 கோடி சம்பளம் தந்து விட வேண்டும் என்று தடாலடியாக கேட்டு வருகிறார். இப்படி இவர்களுக்கிடையே எழுந்துள்ள நீயா? நானா? போட்டியினால், இருவருக்குமிடையே சிக்கி நசுங்கிக்கொண்டிருக்கிறார்கள் படாதிபதிகள்.